இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி….. வேகமாகப் பகிருங்கள்…..

தேநீர், உணவுப் பொதிகளின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைவடைந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளது.