நக்மாவைத் தொடர்ந்து குஷ்பு வின் பதவி மீதும் கை வைக்கப்ப டும் என்று திருவின் ஆதரவாளர்க ளிடம் ராகுல் காந்தி உறுதி அளித்திருப்பதாகத் தகவல்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்படுவார் என குஷ்பு கூறிவந்த நிலையில், அவரது பதவிக்கே ஆபத்து வந்திருப்பதால் விசாரணையில் இறங்கியபோது….
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை எந்தவொரு தலைவரும் மாவ ட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி களை அழைத்துப் பேசியதாகச் சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லை.
ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றதும் சமீபத்தில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை அழைத்துப் பேசியிருக்கிறார்.
அதன்படி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் 12 சர்க்கிள் தலைவர்கள் ஜூன் 8 ஆம் தேதி டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார்கள்.
இந்தச் சந்திப்பின் போது ராகுல் காந்தி இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.ஒன்று மாநில தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட மாட்டார்.
இன்னொன்று வீணாக வதந்தி பரப்பும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான். இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து விட்டு திரும்பியிருக்கும் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசிய போது:
ராகுல் காந்தி எங்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் நிலைவரம் குறித்தும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்தும் கேட்டார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்தான் கோஷ்டிப்பூசல் அதிகம் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
தி.மு.க., அ.தி.மு.க., டி.டி.வி.தினகரன்.,ரஜினி, கமல் நிலைவரம் குறித்தும் கருத்துக் கேட்டவர் எங்களது பிரச்சினைகள் பற்றியும் கேட்டார்.
அவரிடம் எங்களது குறைகளை தெரிவித்த நாங்கள் மாநில தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் இன்னும் 2 மாதங்களில் மாற்றப்பட உள்ளதாகவும் நீங்கள் தான் அதை சொன்னதாகவும் குஷ்பு பேட்டி அளித்துள்ளாரே? என்றும் கேட்டோம்.
மேலும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இக்கட்டான நிலையில் திருநாவுக்கரசர் கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி வருவதாகக் கூறினோம்.
மேலும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் திரு ஆர்வம் காட்டுவதோடு மக்கள் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி வருவது குறித்தும் குறிப்பிட்டோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, மாநில தலைவர் மாற்றம் என்பது வெறும் வதந்திதான்.
அந்த மாதிரியான எண் ணம் எதுவும் எனக்கில்லை. திருநாவுக்கரசர் மாற்றப்படமாட்டார் என்று உறுதியாக கூறியதோடு எனது அனுமதி இல்லாமல் எனது பெயரைப் பயன்படுத்தி குஷ்பு பேசியது தவறு. அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் என்றார்கள்.
ராகுலிடம் என்ன பேசினீர்கள்? திரவியத்திடம் கேட்டோம் நான் எனது மாவட்டத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் ராகுலுக்கு மாதம் தோறும் அறிக்கை அனுப்புவேன். அதனைப்பார்த்து விட்டுத் தான் என்னை நேரில் அழைத்துப்பேசினார். அப்போது குஷ்பு, இளங் கோவன் குறித்தெல்லாம் பேசினார்.
அப்போது திருநாவுக்கரசர் மாற் றம் செய்யப்பட உள்ளதாக குஷ்பு கூறியது குறித்து கேட்டதற்கு குஷ்பு அவ்வாறு பேசியிருப்பது தப்புத்தான். அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று மட்டும் சொன்னார்.
மேலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னையில் ராகுலை நிற்கும்படி சொன்னேன். அதற்கு அவரோ, நீயே அங்கு போட்டியிடு என்பதுபோலத் தட்டிக்கொடுத்து அனுப்பினார் என்றார்.
அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கேட்ட குஷ்புவை தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் போனை எடுக்காததால் மேற் கண்ட செய்தி தொடர்பாக விரி வாக எஸ்.எம்.எஸ். அனுப்பினோம்.
அதற்கு எஸ்.எம்.எஸ். மூலமே பதி லளித்த குஷ்பு, நான் புரளிகளுக்கு எல்லாம் பதில் சொல்வதில்லை. அதனால் இதுபற்றி எந்தக் கருத்தும் கூற இயலாது என்று தெரிவித்தார்.
ஆகவே திருவுக்கு ஆபத்தில்லை என்பதால் அவரது தரப்பு மகிழ் ச்சியும், குஷ்பு நீக்கப்படுவார் என்ற செய்தியால் அவரது தரப்பு கடும் அப்செட்டிலும் இருக்கிறது.
தகவல்: ஷண்






