காங்கேசன்துறை வசந்தகான நாடகசபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்டதடவைகள் மேடையேற்றப்பட்டநாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி. வைரமுத்துஅரிச்சந்திரனாக நடித்தார். ‘சோகசோபிதசொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர்பல்வேறு காலகட்டங்களில்சந்திரமதியாக நடித்தனர்.
இந்தஇசை நாடகத்தைப் பின்னர் பிரபலஎழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன்மேடையேற்றினார். ‘மயானத்தில்மன்னன்’ என்ற பேரிலும் அரியாலையைச் சேர்ந்தபொன்னையா சண்முகலிங்கம்என்பவரால் நடிக்கப்பட்டது.
இந்தஅரிச்சந்திரன் கதா பாத்திரம்மகாத்மா காந்தியின் வாழ்விலும்தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுரிமை, மனைவி, மகனை இழந்தபோதும் சத்தியத்துக்காகநிலைகுலையாத மன்னன்அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மாகாந்தி தனது சுயசரிதையை சத்தியசோதனை என்றபெயரிலேயே எழுதினார்.
தமிழர் தம் வரலாற்றிலும்இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் ‘அவர்’ உயிருடன்வாழவேண்டும் எங்காவது தப்பித்துஇருக்கவேண்டும் என மனதாரவிரும்புகின்றனர். ஆனால் அவர்இல்லை என்பதே யதார்த்தம்.
காணாமல் ஆக்கப்பட்டோர்தொடர்பாக சாத்திரிமாரைஅணுகும்போது அவர் ஓரிடத்தில்உள்ளார்; மறை பொருளாகக் காட்டுகிறது என்றேசொல்லுவர்.உண்மையில்அவர்களுக்குத் தெரியும் ஆள்இல்லையென்று. அதைச்சொன்னால் அன்று கிடைக்கும்வருமானத்துக்குப் பின் எதுவும்கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
இதையொத்த நிலைதான் 2009 மே 18 இற்குப் பின் ஏற்பட்டது. சுமார்முப்பத்தையாயிரம் மாவீரர்களைவழிநடத்தியவர் மாவீரராகிவிட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கத்தயாரில்லை புலம்பெயர் வாசிகளைவழிநடத்துவோர்.
அவரின்அண்ணன் மனோகரன் ‘சிலர்மண்ணில் தேடுகிறார்கள்; சிலர்விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒருஊடகத்தினரின் கேள்விக்குப்பதிலளித்தார். வேறு எப்படித்தான்பதிலளிப்பது? அவர் தமிழரின்மனங்களில் வாழ்கிறார் என்பதேஉண்மை. குலம் அண்ணா அவருக்குவிளக்கேற்றி தமது உணர்வைவெளிப்படுத்த முயன்றார்.
அதற்குத் தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்றுமற்றவர்களுக்குச் சொல்லலாம். குலம் அண்ணருக்கே சொல்லமுடியுமா? தலைவருக்கு விளக்கேற்றஅனுமதிக்காத இடத்தில்எனக்கென்ன வேலை ? எனநினைத்தார். ஒரு மாபெரும்பொய்யை வழிமொழிய அவர்தயாராக இருக்கவில்லை.
இதற்காகஅல்பிரட் துரையப்பா, கருணாபோன்றோருக்கு கொடுத்த பட்டத்தைவாய்மொழியாகவும், சமூகவலைத்தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு2009 க்கு பின்னர் மாவீரர் நாளில் ஒருசாதாரண தமிழ் மகனாக ஒருமூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.
‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்றுதுடிக்கிறார்கள்’ என்றும் ஒருபிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார்.
2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம்மௌனித்து விட்டது’ என்றுஅரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாகஅறிவித்தாயிற்று.
2011 ஜனவரி 11 இல் சுவிஸ் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
சுவிஸிலுள்ள தமிழர்களிடம்பலாத்காரமாக நிதிசேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு. இப்பணம் குற்றவியல்அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டதுஎன்றுமொரு குற்றச்சாட்டு.
வங்கியை ஏமாற்றினர் என்றும் ஒருகுற்றச் சாட்டு. இறுதி யுத்தத்தின்தேவைகளுக்கென தனிமனிதர்களின் பெயர்களில் கடன்பெற்று இயக்கத்துக்குவழங்கப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. .
இந்தக் குற்றச் சாட்டுக்கள்தொடர்பாக அங்குள்ள அப்போதையமற்றும் தற்போதைய தலைமைமௌனம் காத்தது. அவர்கள்வேண்டிய காசு; அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. இந்தக் காசு எங்கே போனதுஎன்பதும் சந்தேகமறத் தெரியும்.
அந்தப் பொய்யை தொடர்ந்துசொல்ல விடாமல் தடுக்கிறார்கள் என்பதேஅவர்களின் கோபம்.
சுவிஸில் உள்ளதமிழர்களிடம் நாம் மனம் விரும்பியேநிதி வழங்கினோம் என்றொருஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால்வழக்கை முடிக்கலாம் என்றொருநிலை இருந்தது.
மாவீரர் நாள்நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்றமக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத்தெரிகிறது.
கடந்த 14 ஆம் திகதி வழக்கின் தீர்ப்புஅறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர்இந்த விடயத்தை உலகுக்குவெளிப்படுத்தினார். உலகெங்கும்உள்ள ஆர்வலர்கள் உணர்வாளர்கள்சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்துகடும் சீற்றமடைந்தனர்.
எனினும்பூப்புனித நீராட்டு விழா, திருமணம்போன்ற வைபவங்களில் இந்தவிடயத்தை தெரியப்படுத்தியஎஸ்.ரி.ஏ. எனும் அமைப்பினர்மக்களிடம் படிவத்தை வழங்கிக்கையொப்பம் பெற்றனர். இச்செய்தியை குலம் அண்ணரின்வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல்.
இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே! உங்கள்அனைவரையும் ஒவ்வொருபோராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன்.
எனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும்! எனது தலைவன் யார்காலிலும் விழக்கூடாது என்றுதான்எங்களுக்குக் கற்பித்திருக்கிறார்.
இன்றோ போராடிய இனம் யார்யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார்; திரும்பி வருவார்என்று சொல்வதன் மூலம் தமக்கானகடமையை நாசூக்காகநிராகரிக்கின்றனர். யுத்தம்முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றஏற்பாடுகளைச் செய்யவேண்டியகடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளைவைத்திருப்போருக்கும், ஏனையபுலம்பெயர்ந்த உறவுகளுக்கும்உள்ளது.
மூன்றாம் தரப்பினர் ஏதோதம்மாலான உதவிகளைச்செய்கின்றனர். மலைபோல் உள்ளதேவைக்கு இது மிகவும் அற்பமே.
இருக்கும் பணத்தை நாட்டில் தேவைஉள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும்பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.
அரசியல்வாதிகளைப் பற்றிச்சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்ததேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும்அருகில் வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.
இந்த நிலையில் தமக்கு சமூகஅங்கீகாரமும் வாழ்வாதாரமும்வழங்கும் சக்திகளின் பின்னால்பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப்போவது தவிர்க்கமுடியாதது.
ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம்வாழ்க!’ என்றே வாழ்த்துகிறோம். இப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்குஇப்படியே சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார்களா? இன்று இவர்கள்சொல்லும் சொல்லை பலர்நம்புகின்றனர்.
இவர்களின்பிள்ளைகள் 36 வருடங்களுக்குப்பின்னும் இதே பொய்யைச்சொல்லப்போகிறார்களா? அப்போதுஎமது பிள்ளைகளும்பேரப்பிள்ளைகளும் இந்தக்கதையைக் கேட்க வேண்டி வருமா?ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ அத்தோடுமனதில் அவரையும் நினைத்துச்சுடரேற்றுங்கள்.
இன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம்ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர்.
மனதை உலுக்கும்செய்தி இது. இன்னொரு விடயம்ஒரு ஆண் எந்த வயதிலும்தந்தையாகலாம். ஆனால்பெண்ணின் நிலை அப்படி அல்ல.
பெரும்பாலும் 35 வயதுக்குப்பின்தாயாக முடியாது. (விதிவிலக்காகசிலர் 40வயதிலும் குழந்தைபெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள்பலருக்குத் திருமணமாகவில்லை. ஒரு பகுதியினர் வவுனியாடொன்பொஸ்கோ சிறுவர்இல்லத்தில் உள்ளனர்.
இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள்பற்றிச் சீரியஸாகச் சிந்திக்கவேண்டும். வயது வந்த ஆண்பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப்பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத்துணியவேண்டும். அது அவருக்குசெய்யும் நன்றிக் கடனாகும்.
நாங்கள்உறவுகள் இருக்கிறோம் எனநம்பிக்கையூட்ட வேண்டும். இந்தவிடயத்தில் ஒவ்வொருவரும்தங்களாலான பங்களிப்பைவழங்கவேண்டும். டொன்பொஸ்கோசிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும்அருட்சகோதரி குடிகாரனாகஇல்லாமல் இருந்தால் அதுவேபோதும் என்கிறார்.
வெளிநாட்டில் சண்டித்தனம்புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கிவிட்டாலும் இவர்கள் விடுவதாய்இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடுசெய்தார்கள்.
பிரதேசவேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் துணைநின்றார்கள். பிரான்ஸில் மாவை கலந்துகொண்ட மாநாட்டில் கண்ணீர் புகையடிக்க ஏற்பாடுசெய்தார்கள்.
எமது மொழியின்பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடுநடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டுதானா? அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகள்.






