முள்ளிவாய்க்கல் வலிமை சுமந்த நாளை தாயகத்திலும், புலத்திலும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர்.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்த போதும், தமிழர்களின் மனதில் நீறுபூத்த நெருப்பாக கிடக்கிறது.
இந்நிலையில் சுவிஸில் வாழும் ஈழத்து சிறுமி ஒருவர் மாவீரர்களை நினைத்து பாடிய பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கேட்கும் ஒவ்வொருவருக்கும் உணர்வுகளை தூண்டும் வகையில் அவரின் பாடல் அமைந்துள்ளது.
உணர்வுபூர்வமான இந்த பாடலை சுவிஸ் வாழ் ஈழத்து சிறுமி அம்ரிதா பாடியுள்ளார்.