முகத்தில் எதாவது சர்ஜெரி செய்யும் போது அல்லது விபத்துகள் மூலம் காயங்கள் ஏற்படும் போது, அவை ஆறியபின் வடுக்களாக அல்லது வெட்டுகளாக தோற்றமளிக்கும்.
இக்காலத்தில் அகத்தோற்றம் மட்டுமின்றி, புறத்தோற்றமும் முக்கியம். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் அழகை மேம்படுத்த சருமத்திற்கு பல பராமரிப்புக்களை கொடுக்கின்றனர். ஆனால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது கெமிக்கல் கலந்த பொருட்களாக இருந்தால், சருமத்தில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கத் தான் செய்யும்.
ஆகவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால் தான், முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க முடியும். இங்கு ஓர் அற்புதமான மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால், நிச்சயம் உங்கள் சரும பிரச்சனைகள் மாயமாய் மறைந்து, அழகு கூடும்.
தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா – சிறிது
* ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
* தேன் – சிறிது
* எலுமிச்சை – 1/2
தயாரிக்கும் முறை:
ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் பேக்கிங் சோடா போட்டு, அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
1. முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும். பயன்படுத்தும் முறை
. பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
நன்மைகள்:
இந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.
4 பாதாம் கொட்டைகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் அதன் தோலை உரித்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து வடுக்களின் மீது தடவவும். பாதாம் கொட்டைகளை சாப்பிடுவதால் சருமம் பொலிவாகும்.
இதில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டச்சத்தை தருகிறது. ஆலிவ் ஆயிலை வடுக்களின் மீது மெதுவாக தடவி மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், வடுக்கள் அல்லது வெட்டுக்கள் மறைந்து விடு
முள்ளங்கி சாறுடன் சிறிது கடலை மாவு மற்றும் மோர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை செய்வதால் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். வடுக்கள் உள்ள இடத்தில் சிறிது தேனை வைத்து அதன் மேல் பேண்ட்எய்ட் போட்டு விடவும். இதனால் முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கருங்கரைகள் உடனடியாக விலகும்.
பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால் முகம் பொலிவடையும். முகத்தில் உள்ள வெட்டுக்கள் மற்றும் பருக்கள் மறையும் . மோரை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் வடுக்கள் மறையும்.
ஒரு மாதம் தொடர்ந்து தேன் கலந்து கேரட் ஜூஸ் பருகினால், முகம் தெளிவாகும். எல்லா வித அழுக்குகளும் முகத்தில் இருந்து மறைந்து முக வசீகரம் அதிகரிக்கும்.
தக்காளியை தோல் உரித்து மசித்து முகத்தில் தடவி ½ மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறையும். வடுக்கள் தோன்றாது.
ஆரஞ்சு தோல் பவுடர் ½ டேபிள்ஸ்பூன், முல்தானிமிட்டி ½ டேபிள்ஸ்பூன் மற்றும் புதினா பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு ஜூஸை முகத்தில் தடவுவதால் முகத்தில் உள்ள களங்கங்கள் மறையும். இதனுடன் முல்தானிமிட்டியும் சேர்த்து தடவலாம்.
காய்ந்த ஆரஞ்சு பழ தோல் பவுடரை தயிருடன் சேர்த்து பேக் போல போடலாம். இதனால் சில தினங்களில் முகத்தில் உள்ள வடுக்கள் மறையும்.
கற்றாழை ஜெல் அல்லது க்ரீம் பயன்படுத்துவதால் , முகத்தில் பருக்களால் ஏற்படும் ஓட்டைகள் குறையும். சருமம் அழகாகும்.
எலுமிச்சை சாறை முகத்தில் வடுக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் வடுக்கள் மறையும்.






