இலங்கை தங்க நகைகளை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பல்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக முறையில் தங்கம் கடத்துவதனை தடுப்பதற்காக கடுமையான சட்டத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய அடகு வைத்த தங்கங்களை ஏலம் எடுக்கும் குழுவினர் தொடர்பிலான தகவல்களை மத்திய வங்கிக்கு வழங்குமாறு ஏனைய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிடம் அடகு வைத்த தங்கத்தினை ஏலத்தின் மூலம் வாங்கிக் கொண்டு, இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தக வங்கிகளிடம் பெருந்தொகை நகையை ஏலத்தின் மூலம் பெற்றுக்கும் நபர்களில் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.