புலம்பெயர் தேசத்தில் அரசனாக மாறிய தமிழன்!!(வைரலாகும் காணொளி)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயகத்தை புனரமைக்க புலம்பெயர் மக்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.கொடூர யுத்தத்தில் குண்டு மழைக்கு இலக்கான எம் தேசம் சல்லடையாகி வறட்டு கிடக்கின்றது. அதனை மீண்டும் புதுபிக்க மற்றுமொரு போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்காக புலம்பெயர் வாழும் தமிழ் மக்கள் பெருந்தொகை நிதியினை வழங்கி வருகின்றனர்.ஆனால், ஒருசிலர் அளவுக்கு அதிகமாக பணம் சேர்த்து, உல்லாச வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், கனடாவிலுள்ள பணக்கார தமிழர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.கனடா ரொரான்டோவில் வாழும் தமிழர் ஒருவர் தனது 50ஆவது பிறந்த தினத்தை மிகவும் கோலகலமாக அரச சபைக்கு இணையாக கொண்டாடியுள்ளார்.

இது குறித்து பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.பலர், இவ்வாறான கொண்டாட்டங்களை எதிர்த்து வரும் நிலையில், சிலர் அவரின் சொந்த பணத்தில் எப்படியும் வாழலாம் என்ற கருத்தினையும் முன் வைத்து வருகின்றனர்.