இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சித்த தந்தை!! ஆபத்தான நிலையில் மூவரும் வைத்தியசாலையில் அனுமதி!!

தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

35 வயதான தந்தைஇ தனது 10 வயது மகனுக்கும் 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து அவரும் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஷம் அருந்திய மூவரும் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.