அழுகிய நிலையில் ஆணின் சடலம்!

மஹியங்கனை நகரில் கைவிடப்பட்ட கடை ஒன்றுக்குள் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல் ஒன்றுக்கு அமைய இன்று காலை அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயது முதல் 60 வயது மதிக்கத்தக்கவர் என எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலத்திற்கு அருகில் இருந்து வெற்று மதுபான போத்தல் ஒன்றும் விஷ குப்பி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.