வெசாக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் நீதிபதி இளம்செழியன்!! ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!!

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் எற்பாட்டில் யாழ்ப்பாண பட்டிணமும் புத்தசாசன தர்ம சிந்தனை என்னும் கருப்பொருளில் புனித வெசாக்வலய நிகழ்வுகள் நேற்று யாழ் பண்ணை திறந்த முற்றவெளிமைதானத்தில், யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகக்கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிராட்சி தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக யாழ் இந்திய உதவித்துணைத்தூதுவர் ச.பாலச்சந்திரன்,மற்றும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்சழியன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இவ் புனித வெசாக் வலயத்தின் பிரதான வெளிச்கூட்டினை ஆரம்பித்துவைத்தனர்.குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரொகன் பேனாண்டோ,மற்றும் வடமாகாண கடற்படைத்தளபதி ரவீந்திர விஐயவர்த்தன.

மதத்தலைவர்கள்,அரச உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.