திருமணம் என்பது 1000 காலத்து பயிர் என்பார்கள் முன்னோர்கள். அதனால் நமக்கு வருகிற துணையை நாம் நன்கு ஆராய்ந்து தெரிவு செய்ய வேண்டும்.
அதுவும் இந்த நவீன காலத்தில் பலர் பணம், அழகு போன்ற பல்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இக் காலத்திலும் உண்மையான அன்பிற்காக பணம், அழகு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
கோரமான முகம் கொண்டவரை புனிதமான அன்பிற்காக, அழகான இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
புன்மீ(21) எனும் இளம் பெண் கோரமான முகம் கொண்ட வயதான நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
குறித்த இளம் பெண் அழகாக இருந்த நிலையில் அந்த நபரின் முகம் கோரமாகவும், பெண்ணை விட வயதானவராகவும் காட்சியளித்தார்.
மேலும், இது உண்மையா எனக் கேள்வி எழுந்த நிலையில் அது உண்மை தான் என புன்மீ தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், எளிமையான முறையில் குறித்த நபரை திருமணம் செய்து கொண்டதாக புன்மீ தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாகவும், தனது முதல் கணவர் சூதாட்டத்தில் ஈடுபடுபவர் எனவும் குறிப்பிட்டுளார்.
முகம் கோரமாக இருப்பதோடு, பணம் எதுவும் இல்லாத ஏழையாக இருந்தாலும், இருவருக்கும் இடையில் உள்ள அதீத காதலால் அவரை புன்மீ திருமணம் செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், புன்மீ தனது காதல் கணவரை பேங்காங் அழைத்துச் சென்று முகத்திற்கு சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.






