பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ!

கண்டி – பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவிலேயே இந்த தீ பரவியுள்ளது.

மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.