கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு ஓர் அறிவித்தல்!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சு இந்த தகவலை இலங்கைக்கு அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளும் போது நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நற்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஐக்கிய அரபு இராச்சியத்தின் தீர்மானத்தினால் அந்த நாட்டிலுள்ள பல தூதரகங்கள் பல்வேறு சிக்கலை எதிர்நோக்கியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.