வசந்த கால விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பம்!! நுவரேலியா நகர் கோலாகலம்!

நுவரெலியாவில் வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள் இன்றைய தினம் நுவரெலியாவில் நடைபெற்றது.நுவரெலியா மகாஸ்தோட்ட – பிளக்பூல் பிரதான வீதியில் இந்த மோட்டார் சைக்கிள் போட்டி காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தன.இலங்கை மோட்டார் ஒட்ட சங்கம் மற்றும் நுவரெலியா மோட்டார் ஒட்ட கழகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.இதன்போது அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.