வெயிற்காலங்களில் கால்கள் வரண்டும் கருமையடைந்தும் காணப்படும். இதற்காக ஆயிரக்காணக்கான பெண்கள் அழகு நிலையங்களை நாடிச் செல்வதுண்டும்.
இதற்கு நாம் பணம் செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கை கால்களை வெண்மையாக்க முடியும்.
வழிமுறை 1
- கடலை மாவு
- தயிர்
முதலில் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூனில் கடலை மாவை போட்டு தயிர் ஊற்றி பேஸ்ட் செய்து கை மற்றும் கால்களி்ல் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
வழிமுறை 2
- வெள்ளரிக்காய்
- மஞ்சள் தூள்
வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர கை கால்கள் கருமை நாளடைவில் மறைந்து வெண்மையாகிவிடும்.
வழிமுறை 3
- சந்தனம்
- மஞ்சள் தூள்
- ரோஸ் வாட்டர்
ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் மற்றுமு் சந்தனப் பொடியுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.