பேருந்தில் திடீர் சோதனை: பெண்கள் கைது!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கேரள கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி பேருந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருந்த குறித்த பேருந்தை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இதன்போது பேருந்தில், 2 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த அரலங்கவில பகுதியினை சேர்ந்த காஞ்சன சஞ்ஜிவனி (வயது-25), காசினி மதுமாலி (வயது-26) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது இவ்வாறான முறைப்பாடுகள் முன்னரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.