ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியதனைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சி இனி எவருக்கும் ஆதரவினை வழங்கக்கூடாது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “மீண்டும் எந்தவொரு நாளிலும் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு வழங்கக்கூடாது.
2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் தெளிவான மாற்றம் அவசியமானது.
புத்தாண்டுக்கு முன்னதாக கட்சியில் பாரியளவில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.