இரண்டு கோடி ரூபா நன்கொடை வழங்கிய இலங்கை வியாபாரி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கினார்.

ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரி புதன்கிழமை ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

ஏழுமலையானின் பக்தரான இவர், ஒவ்வொரு ஆண்டும் அன்ன தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகிறார்.

இதற்கு முன், திருமலையில் உள்ள ஸ்ரீவத்ஸா ஓய்வறையைக் கட்டி, அவர் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.