பேஸ்புக் தடையை நீக்குவது குறித்த முக்கியமான தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக இலங்கை வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பிரதமரையும், ஜனாதிபதியின் செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தணிக்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன கருத்துக்களுள் இனவன்முறைகளை தூண்டுவனவற்றை அடையாளம் கண்டு நீக்குவதற்கான முறைமையை அமுலாக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தவிடயங்களில் இன்று இணக்கம் காணப்படும் பட்சத்தில், நாளை முதல் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






