செய்வினை, மாந்த்ரீகம்,திருஷ்டி போன்றவை குறித்து எல்லாருக்கும் ஒரு பயமிருக்கும். ஏற்கனவே அதனைப் பற்றி ஏராளமான கட்டுரைகளையும் நாம் படித்திருப்போம். பொதுவாக இது போன்ற மாந்திரீக விஷயமென்றாலே நிச்சயமாக இடம்பெறக்கூடிய ஒரு பொருள் எலுமிச்சை.
இப்படி செய்வினை, திருஷ்டி போன்றவற்றிற்கு எலுமிச்சையை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?
பொதுவாக இந்த செய்வினையின் போது எந்த நபருக்குச் செய்யவேண்டுமோ அவரை பிரதிபலிக்கக்கூடிய ஒரு பிம்பம் தேவைப்படுகிறது. அதற்கு சில பூஜைகளை செய்து கெட்ட சக்திகளை ஏற்றுவர்.
அப்படி செய்யும் போது எளிதாக அணுகும் விதத்திலும், கையடக்கமாவும் இருக்க எலுமிச்சை முதல் சாய்ஸாக இருக்கிறது.
இயற்கையாகவே எலுமிச்சைக்கு கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம். குறைந்தது அரைமணி நேரத்திற்கும் மேலாக கெட்ட சக்திகள் சுற்றியிருக்கும் இடத்தில் எலுமிச்சை வைத்திருப்பதோ அல்லது திருஷ்டியைக் கழித்தாலோ அதன் சக்தி எளிதாக எலுமிச்சை கிரகத்துக் கொண்டுவிடும்.
இதனால் தான் தெருவில் கிடக்கும் எலுமிச்சை மிதிக்கவோ தாண்டவோ கூடாது என்று சொல்கிறார்கள்.
அமங்கலத்தின் நீட்சியாகவும் துர்தேவதைக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எலுமிச்சையின் வாசம் துர்தேவதைக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அதனால் எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் துஷ்ட சக்திகளை ஏவவும், எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்த செய்வினைக்காக ஏவப்பட்டிருக்கும் எலுமிச்சை பழங்களில் பார்த்தால் ஒரு இடத்திலாவது ஊசியால் குத்தியிருப்பார்கள்.
துஷ்ட சக்தியை உள்நுழைக்கவோ அல்லது பிம்பமாக கருதப்படும் நபர் பாதிக்கப்பட வேண்டியோ இப்படி குத்தப்படுகிறது.
ஊசியால் குத்தும் வகையில் இலகுவான ஒரு பொருள் எலுமிச்சை. அதோடு மிகவும் எளிமையாக கிடைத்துவிடுகிறது. யாருக்கும் சந்தேகம் வராது, இதனை மறைத்து பாதுகாக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.
வீடு, கடை வாசலில் எல்லாம் எலுமிச்சை மற்றும் நான்கைந்து பச்சை மிளகாயை சேர்த்து கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். சிலர் தங்களது கனரக வாகனங்களிலும் இப்படி தொங்கவிட்டிருப்பார்கள். திருஷ்டி கழியும் என்று பொதுவான காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதற்கு பின்னால் இருக்கும் கதைகள் பல.
அறிவியல் காரணம்
எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை மெல்ல அது ஆவியாக வெளிப்படுத்தும். அந்தக் காற்றினை சுவாசிப்பதால் நமக்கு நன்மைகள் உண்டாகும் நச்சு வாயுக்கள் நம்மை அண்டாது.
எலுமிச்சையும், பச்சை மிளகாயும் மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வாசலில் இதனை தொங்க விடுவதால் திருஷ்டி காரணம் மட்டுமல்ல சில மருத்துவ காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.
இவை இரண்டுமே மிகச்சிறந்த கிருமி நாசினி.இதனை வாசலில் தொங்க விடுவதால் எளிதில் பரவக்கூடிய நோய்க்கிருமிகள் நம்மை அண்டாது அது மட்டும் இன்று எலுமிச்சை யால் செய்யப் படும் செய்வினையும் அதே எலுமிச்சை யால் அழிந்துவிடும்.