இலங்கையில் உள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்!

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பயணிகள் தமது கடவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கண்டியில் நிலைமைகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும் நிலைமை வழமைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், அவர்கள் இலங்கையில் திரும்பிச் செல்லும் வரை அவர்களின் தற்காப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அனைத்து துறைகளுடனும் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.