இலங்கை வங்கிகளில் வட்டி வீதம் திடீரென அதிகரிப்பு!

இலங்கையில் வங்கிகளின் வட்டி வீதம் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ளதாக வங்கிகளின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிணை முறி வட்டி அதிகரிப்பு, மத்திய வங்கியின் பண பெறுமதி குறைவடைந்தமை காரணமாக வட்டி வீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை விடவும் 900 மில்லியன் டொலர் அதிகமான செலவிடப்பட்டமை மற்றும் தங்க இறக்குமதி நிறுவனங்களுக்கு 500 மில்லியன் டொலர் அதிகரித்தமை காரணமாக அந்நிய செலாவணி பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செலவினம் ஏனைய வருடத்துடன் ஒப்பிடும் 2 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

இந்த அனைத்து விடயங்கள் காரணமாக வங்கி வட்டி எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.