மாபெரும் கிரிக்கெட் திருவிழாவிற்கு தயாராகும் கனடா!!

கனடாவில் கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை கனேடிய கிரிக்கெட் சங்கத்துடன் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன் ஓர் அங்கமாக, கனடாவில் சர்வதேச வீரர்களை சேர்த்துக்கொண்டு புதிய இருபதுக்கு இருப்பது தொடரொன்றை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கவுள்ள குறித்த தொடருக்கு ‘குளோபல் T:20 கனடா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் கண்டிப்பாக ஒரு அணியில் நான்கு கனடாவின் உள்நாட்டு வீரர்களும் மற்றையவர்கள் வெளிநாட்டு வீரர்களுமாக உள்வாங்கப்படவுள்ளனர்.குறித்த தொடர் கனடாவின் 3 மைதானங்களில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.