வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது!! நீதிமன்றில் ஆஜர்!!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதிமன்றில் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.