ஸ்ரீதேவியின் கழுத்தில் காயம்? போனி கபூர் அதிரடித் திட்டம்…

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் சனிக்கிழமை இரவு காலமானார். 54 வயதில் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தது இந்தியு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி சென்றிருந்த போது, அங்கு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் இறந்த நிலையிலே தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து , திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள தனது அறை பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின.
அது மட்டும் இல்லை, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. பொலிஸாரின் தீவிர விசாரணைகளும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இந்த நிலையில் , இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் நாளை தான் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணம் தொடர்பான மர்மம் நீங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் ஸ்ரீதேவியின் மரணத்தில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்களை வெளிக்கொணரப் போகின்றனர் என்று..
நடிகை ஸ்ரீதேவியை முதலில் பார்த்த தருணத்தில் அவரது அழகில் மெய்மறந்ததால், அவரை திட்டம் போட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாராம் அவரது கணவர் போனி கபூர்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையை தன்னுடைய நடிப்புத் திறமையாலும், அழகாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்த இவர், தன்னுடைய 4வது வயதிலேயே நடிப்பில் இறங்கியுள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளாம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா டுடே சார்பில் நடந்த பெண்கள் உச்சி மாநாட்டில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் கலந்து கொண்டார். அப்போது, போனி கபூரிடம் நீங்கள் எப்படி ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 1970ல் ஸ்ரீதேவி நடித்த ஒரு தமிழ் படத்தை திரையில் பார்த்தேன். அப்போதே, அவர் மீது எனக்கு ஒரு இனம் புரியாத தாக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அப்போது, ரிஷி கபூர் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம்.
அந்தப் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து அவரை சந்திக்க சென்னை சென்றேன். ஆனால், அவர் சிங்கப்பூரில் இருந்தார். அதன் பிறகு ஷேகர் இயக்கத்தில் மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்போது, அவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் ரூ.8 லட்சம்.
என்னுடைய படத்தில் நடிக்க ஸ்ரீதேவியின் அம்மா ரூ.10 லட்சம் கேட்டார். நான், அவர் மீது கொண்ட காதலால், ரூ.11 லட்சம் கொடுத்து அவரது அம்மாவின் மனதில் இடம் பிடித்தேன். படப்பிடிப்பின் போது அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு அவரையும் என் பக்கம் இழுக்க ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில் கபூரின் மனைவி மோனாவிடம் சொல்லிவிட்டு ஸ்ரீதேவிக்கு எங்கெல்லாம் படப்பிடிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று, அவரை நெருங்கினேன். எப்படி உண்மையாக இருக்கிறேன் என்று உணர்ந்த ஸ்ரீதேவிக்கு இப்போது நான் கணவராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.