நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்திய நேரப்படி மதியத்துக்கு மேல் மும்பைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பின்னர் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக சில மணி நேரங்கள் வைக்கப்பட உள்ளது.
இதையடுத்து மும்பை, ஜுஹு பவன் ஹன்ஸ் கிரிமடோரியத்தில் இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஸ்ரீதேவியின் மறைவு குறித்து அவரது கணவர் போனி கபூர் சார்பில் யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்
அதில், போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் மற்றும் கபூர், அய்யப்பன் ஆகியோர் ஸ்ரீதேவி கபூரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவரின் உடல் இந்தியாவிற்கு வர உள்ள நிலையில் அது பற்றிய விவரங்களை கிடைக்கப் பெறும் போது தெரிவிக்கிறோம்.
தயவு செய்து யாரும் இது தொடர்பாக குடும்பத்தினருக்கு போன் செய்து கேட்க வேண்டாம் என கேட்டு கொள்வதாக கூறப்பட்டுள்ளது