மகிந்­தவிற்கு ஜெனி­வா­வில் நெருக்கடி! – கெஹ­லிய..

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அரசை, கூட்டு அரசு அர­சி­யல் பழி­வாங்­க­லுக்­காக ஜெனி­வா­வில் காட்­டிக்­கொ­டுக்­கும்.

இதன் பின்­னர் இலங்கை பன்­னாட்டு அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­ப­டும். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்கை தொடர்­பில், மக்­க­ளால் வெறுக்­கப்­பட்ட கூட்டு அரசை ஆத­ரிக்­கும் மேற்கு நாடு­கள் கடந்த கூட்­டத் தொடர்­க­ளில் இலங்­கைக்கு எதி­ரா­கப் பெரிய அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கித்­தன. இலங்கை தாக்­கங்­களை கடந்த காலங்­க­ளில் எதிர்­கொண்­டது.

கூட்டு அர­சும் அவற்றை உண்மை என்று நிரூ­பிக்­கும் வித­மாக மௌனம் காத்­த­மை­யைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரில் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் இலங்­கை­யின் பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் நல்­லி­ணக்க விட­யத்­தின் அச­மந்தப் போக்கைக் கண்­டித்து அதி­ருப்தி அறிக்­கை­யை வெளி­யி­ட­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது நாட்­டில் பெரிய அள­வில் அர­சி­யல் நெருக்­க­டி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இத­னைக் கார­ணம் காட்டி கூட்டு அரசு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அர­சைக் காட்­டிக்­கொ­டுத்து தமது அர­சி­யல் பழி­வாங்­க­லை நிறை­வேற்­றி­வி­டும் என்ற அச்­சம் தற்­போது தோன்­றி­யுள்­ளது.

கூட்­ட­மைப்பை தமிழ் மக்­கள் நிரா­க­ரிப்பு

எதிர்க்கட்­சிப் பதவி தொடர்­பில் சர்ச்­சை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இத­னைப் பயன்­ப­டுத்தி சிலர் நாட்­டில் தமிழ் மற்­றும் சிங்­கள மக்­க­ளி­டையே இன­வா­தத்தை உரு­வாக்­கிக் கொள்ள முயற்­சிக்­கின்­ற­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை வடக்கு – கிழக்கு மக்­கள் நிரா­க­ரித்து விட்­ட­மை­யை தேர்­தல் பெறு­பெ­று­கள் நன்கு புலப்­ப­டுத்தி நிற்­கின்­றன. தமக்கு அர­சி­யல் தீர்வு பெற்­றுத் தரு­வ­தாகக் கூறி தொடர்ந்து ஏமாற்­றப்­பட்­ட­தை­யும், அதன் கார­ண­மாக இனி­வ­ரும் காலங்­க­ளில் எவ்­வித பய­னும் இல்லை என்­ப­தை­யும் உணர்ந்த தமிழ் மக்­கள் யதார்த்த நிலைக்கு உட்­பட்டு சுய­மான தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மக்­க­ளின் குறிப்­பாக தமிழ் மக்­க­ளின் தீர்­மா­னத்தை மதித்­துச் செயற்­படவேண்­டும். மக்­கள் புதிய மாற்­றத்தை நோக்கிப் பய­ணிக்­கும் பொழுது அதற்­குத் தடை­யாக அர­சி­யல் சூழ்ச்­சி­களை பிர­யோ­கிப்­பது அந்த மக்­க­ளுக்கு விரோ­த­மான செய­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.

எதிர்க்கட்­சித் தலை­வர் கூட்டு அர­சின் அர­சி­யல் நலனை மாத்­தி­ரமே பற்றி கவ­னம் செலுத்­து­கின்­றார்.

நாட்­டின் தேசிய நலன் குறிப்­பாக தமது இனத்­தின் நலன் தொடர்­பில் கவ­னம் செலுத்­தத் தவறி விட்­ட­மையே அவ­ரது பத­விக்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள சோத­னைக்கு முக்­கிய கார­ணம் -– -என்­றார்.