பேருந்தின்மீது மோதிய கார்…! வாலிபர் மரணம்..

அரசுப் பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தனது 2  நண்பர்களுடன் இன்றைய தினம், கோவை நோக்கி பல்லடம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஆறாக்குளம் பிரிவு என்ற இடத்தில் தனக்கு முன்பாக சென்ற காரை அவர் கடக்க முயற்சித்தபோது, எதிரில் மதுரை நோக்கி சென்றுகொண்டு இருந்த அரசுப் பேருந்தின்மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மேலும் காரில் உடன் பயணித்த 2 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு,கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த பார்த்தசாரதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.