14 கோடிக்கு தனது கற்பை ஏலத்தில் விற்ற பேரழகி… தொழிலதிபர்கள் போட்டி!

இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் மனதில், எங்கய்யா போகுது இந்த உலகம்… பேசமா அழிஞ்சு கிழிஞ்சு போயிட்டா கூட சந்தோசமா இருக்கும் போ… என கூட தோன்றலாம். ஒருவர் பிரபலம் அடைய வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உண்டாகி இருக்கிறது.

அதற்கும் மேலாக, பணம் கிடைக்குமா? அப்போ சொல்லுங்க நான் என்ன வேணும்னா செய்யிறேன் என்ற நிலை ஆண், பெண் பேதமின்றி, மானம், மரியாதை தாண்டி நிற்கிறது. இதோ! 14 கோடிக்கு கற்பை விற்று 300-க்கும் மேலான பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென்…

1.7 மில்லியன்!

அலெக்ஸாண்டிரா கெஃப்ரென ரோமானியாவை சேர்ந்த மாடல் அழகி. வெறும் 18 வயதே நிரம்பிய இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் முறையாக தனது கன்னித்தன்மையை 1.7 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தொகை வந்துள்ளதாக செய்திகள் வெளியிட்டு உலக பிரபலம் அடைந்தார்.

14 கோடிக்கு ஏலம் !

இப்போது இவர் கடைசியாக தனது கற்பை ஒரு பெயர் வெளியிடப்படாத ஹாங்காங் தொழிலதிபர் ஒருவரிடம் விற்றுள்ளார்.

மேலும், அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் தான் கற்பை ஏலத்தில் வென்ற ஹாங்காங் தொழிலதிபர் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர். அவருடன் போனில் பேசியதை வைத்தே இதை தான் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.

தனது கற்பை விற்பது குறித்து சென்ற நவம்பர் மாதம் முதலே பேசி வந்தார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். யார் அதிக தொகை கோருவோருக்கு தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு தரவிருப்பதாகவும் கூறிவந்தார்.

தனது கற்பை ஏலம்விட்டு விற்ற செய்தி வெளியான பிறகு அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனை அவரது குடும்பம் ஒதுக்கிவிட்டது. ஹாங்காங் தொழிலதிபருடன் தான் தங்கவிருக்கும் ஹோட்டலையும் புக் செய்துவிட்டார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். இந்த செயலை இவர் சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் உடன் இணைந்து செய்துள்ளார்.

20%

அலெக்ஸாண்டிரா கெஃப்ரென்-க்கு வரும் தொகையில் இருந்து 20% சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ்-க்கு சென்றுவிடுமாம். இந்த நிகழ்வுக்கு பிறகு சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ்-க்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கற்பையும் விற்க அணுகியுள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய, ஆப்ரிக்கா, நார்த், சவுத் அமெரிக்கா மற்றும் அரபிக் நாடுகளிலும் இருந்து அதிகளவிலான பெண்கள் தங்களை தொடர்பு கொண்டு கற்பை விற்க முன்வருவதாக சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் கூறுகின்றனர்.