ஜே.வி.பியின் வேட்பாளர் கைது!

அக்மீமன பிரதேசசபைக்கு இம்முறை மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட இருவர் எதிர்வரும் 12ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் மூன்றாவது குற்றவாளியான யடமல்வத்த கமகே அத்துல குமார என்பவர், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராவார்.

அக்மீமன பொலிஸ் பிரிவில் ஹியாரே என்ற பகுதியில் 2006 ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி சமரவீர ஆராச்சிகே மிஹிர பிரியந்த என்பவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக காலி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.