இந்தியாவில், சொத்துக்காக மனநலம் சரியில்லாத அக்காவை கொடூரமாக தாக்கிய தங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் நிம்தா பகுதியை சேர்ந்தவர் சிகிதா. இவருக்கு திருமணமாகாத நிலையில் மனநலமும் சரியில்லாமல் இருந்துள்ளது.
சிகிதாவுடன் அவரின் தங்கை ரீட்டா வசித்து வந்தார். சகோதரிகளின் தாய் தான் இறப்பதற்கு முன்னர் வீடு மற்றும் சொத்துக்களை சிகிதா பெயரில் எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து, சொத்துக்களை சிகிதாவிடமிருந்து பறிக்க நினைத்த ரீட்டா அவரை சில தினங்களுக்கு முன்னர் வீட்டு வாயிலில் வைத்து சரமாரியாக அடித்துள்ளார்.
இதோடு கால்களால் சிகிதாவின் கழுத்தை அழுத்தியும், கொம்பால் இரக்கமின்றியும் தாக்கியுள்ளார்.
இதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.
இதையடுத்து நகர பொலிசார் சிகிதாவை கைது செய்துள்ளனர்.