மனிதக்கழிவை விண்கல் என நம்பி பிரிட்ஜில் பத்திரப்படுத்திய மக்கள்! இப்படியும் ஒரு கூட்டமா?

டெல்லி அருகே இருக்கும் குருகிராம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விமானத்தில் இருந்து கீழே விழுந்த மனித கழிவை விண்கல் என நம்பி குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Asteroid-Doomsday-Space-671220

குருகிராம் அருகே உள்ள பாசில்பூர் பாடிலி கிராமத்தில், வானத்திலிருந்து 8 கிலோ எடை கொண்ட பொருள் ஒன்று வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனால் அப்பகுதில் ஒரு அடி பள்ளம் ஒன்றும் உண்டாகியுள்ளது.

இந்நிலையில், இதையறிந்த கிராம மக்கள், அப்பகுதியில் சென்று பார்த்ததுடன், அதை சிலர் எடுத்து வந்து தங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், அந்த பொருள் விமானத்திலிருந்து காய்ந்த நிலையில் விழுந்த மனிதக்கழிவு என்று கண்டறியப்பட்டது.

உண்மையை அறிந்த கிராம மக்கள், தாங்கள் எடுத்துச் சென்றவற்றை வீட்டிளிருந்து தூக்கி எறிந்து, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர்.