புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் படகு மூலம் இலங்கைக்குள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார் என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ltte-flag-1கடந்த வாரம் மீனவ படகு ஒன்றின் ஊடாக மன்னார் பிரதேசத்திற்கு, இவர் வருகை தந்துள்ளதாக திவியன என்னும் சிங்கள ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின் போது இந்தியாவுக்கு சென்றிருந்த ஜெயந்தன், அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார் என்றும். அவரது மனைவியும் இறுதி செயற்பாட்டின் போது இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர் தற்போது பிள்ளைகளுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினருக்கு பலத்த எதிர்ப்பை காட்டிய படையணிகளில் ஜெயந்தன் தலைமையிலான படையணி முக்கியமானதாகும்.

ஜெயந்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஊடாக மன்னாருக்கு வந்து சென்றுள்ளார். இதன்போது மன்னாரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகளின் ஒரு தொகை பணத்தையும் கொண்டு சென்றுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஜெயந்தன் என்பது விடுதலை புலிகளினால் அவருக்கு வழங்கப்பட்ட பெயராகும். இந்நிலையில் அவரது உண்மையான பெயர் மோகனதாஸ் என்பதனை இந்த நாட்களில் பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் பணத்தை எடுத்துச் செல்ல இவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில். இறுதிக்கட்டத்தில் புலிகள் புதைத்த பணம் மற்றும் நகைகளை, சில முன் நாள் உறுப்பினர்கள் எடுத்துச் செல்வது, தற்போது சாதாரணமாகிவிட்டது.