ஹெரோயின் வைத்திருந்த பெண் கைது!!

கிரேன்பாஸ் பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

sffasf1குறித்த பெண் மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 50 கிராம் 100 மில்லகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

53 வயதுடைய குறித்த பெண் , கிரேன்பாஸ் பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.