ஆர்.கே.நகர் மக்கள் டி.டி.வி.தினகரனை வலைவீசி தேடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், இந்தியாவிலேயே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் இத்தகைய மோசமான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது தி.மு.கதான்.
திருமங்கலம் பார்முலாவை தி.மு.க தான் அறிமுகப்படுத்தியது. தி.மு.கவை அப்படியே பின் தொடர்ந்து ஹவாலா பார்முலாவை டி.டி.வி.தினகரன் அறிமுகம் செய்துள்ளார்.
ரூ.20 நோட்டுகளை டோக்கனாக கொடுத்து ரூ.10000 தருவதாக கூறி டி.டி.வி.தினகரன் தற்காலிக வெற்றியை பெற்றிருக்கிறார்.
டி.டி.வி.தினகரன் இன்னும் தொகுதி பக்கமே போகவில்லை. ரூ.10000 தருவதாக கூறிவிட்டு இதுவரையிலும் பணம் தரப்படாததால், டி.டி.வி.தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் தேடிவருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.