மணல் கடத்திய லொறிகள் பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 19 லொறிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5a42359f07ea2-IBCTAMILஆந்திராவில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமான லொறிகளில் சென்னைக்கு மணல் கடத்தப்பட்டு வருகின்றதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார் சோதணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனடிப்படையில் கும்மிடிப்புண்டி பகுதியில் சோதணையின் போது 19 மணல் கடத்தல் லொறிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும்,இதில் 4 லொறி சாரதிகள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதாகிய சாரதிகளிடம் மணற்கடத்தலுடன் சம்பந்தமுடையவர்களை பற்றி விசாரித்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கும்மிடிப்புண்டி,சிப்காட் மற்றும் கவரைப்பேட்டை பொலிஸார் முன்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.