கார் மோதி, ஆஸி. பாதசாரிகள் மீது விபத்து!

அவுஸ்திரேலியா நாட்டின், விக்டோரிய மாநில தலைநகரான மெல்பொர்னில் பாதசாரிகள் மீது கார் ஒன்று தாறுமாறாக மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆஸி. பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து - 12 பேர் காயம்!

இந்தச் சம்வம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மெல்போர்ன் நகர் ப்ளைன்டர்ஜ் ஸ்டெஷன்(Blendage s) வீதியில் இன்று வியாழக்கிழமை(21.12.2017) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 4.41 அளவில் வேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியுள்ளது.

இதில், ஒரு குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த இருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளர். விபத்தில் தலையில் காயமடைந்த குழந்தை, ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுததுச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, விபத்குக்குக் காரணமான கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.