சாதாரண தரப் பரீட்சையில் மோசடி!! மாணவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

5a38abf592c6b-IBCTAMILக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியான முறையில் கணிதப்பாடத்திற்கு விடையெழுதியதாக கூறப்படும் மாணவரின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாணவர் எஞ்சியுள்ள ஏனைய பாடங்களை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்முறை பரீட்சைக்கு தோற்றிய பாடங்களின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுராதபுர வெலிசிங்க ஹரிஸ்சந்திர வித்தியாலய மாணவர் ஒருவரே இந்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.