இன்று உலகையே அதிர வைத்த மீனவர் எடுத்த வீடியோ!!

ஓகி புயலின் போது நடக்கடலில் சிக்கி தவித்த மீனவ படகில் இருந்த ஒரு மீனவர் எடுத்த வீடியோ இன்று உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

வெப்ப மண்டலச் சூறாவளியான ஒகி புயல் வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் நவம்பர் 29ல் உருவான கொடூரமான புயலாகும்.

MhcgZaM3large_okkistrom-3688இது நிலப்பகுதிக்கு அருகில் உருவானதால் ஆரம்பத்தில் இது வலுவடையவில்லை. எனினும் அரபிக் கடலை அடைந்தபோது டிசம்பர் 1ம் தேதி இது வலுவடையத் தொடங்கியது.

இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு இது இலட்சத்தீவுகள் மற்றும் இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. இப்புயலின் இறுதிக்கட்டத்தில் இது குஜராத்தைக் கடந்தது.

இப்புயலின் காரணமாக 39 பேர் உயிரிழந்தாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மீனவர் ஒருவர் நடுக்கடலில் எடுத்த வீடியோ இந்த அளவிற்கு கொடூரமான நிலையை நம் மீனவர்கள் எதிர்கொண்டு இருக்கிறார்களா என்பதை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது.

யாரும் பிரிந்து போய்விட கூடாது என்று செய்த முன்னெச்சரிக்கைகளும், கடலின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் காட்சியும் நெஞ்சை பதற வைக்கிறது.

அந்த கொடூரமான காட்சி கீழே உள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.