காதலன் கொடுத்த திருமண பரிசை பார்த்து அதிர்ச்சியில் இறந்த பெண்..!!

அந்த அழகிய பெண்ணின் பெயர் கவிதா… குனிந்த தலை நிமிராமல் கல்லூரிக்கு செல்லும் அவளது தலையில் பூ இல்லாத நாளே இருக்காது.

படிப்பில் மிகவும் திறமைசாலியான கவிதா, நடனத்திலும் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கவிதாவுடன் பேச வேண்டும் என்று ஏங்கும் அளவிற்கு மிகவும் அழகானவள்.

அந்த நேரத்தில்., திலீப் என்கின்ற இளைஞனோடு கவிதாவிற்கு காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

காதலிக்கும் பொழுது திலீப் எனது உயிர் உன்னிடத்தில் உள்ளது… உனது உயிர் என்னிடத்தில் உள்ளது என்று அடிக்கடி கூறுவான். திலீப்பின் இந்த பேச்சு கவிதாவுக்கு அவன் மேல் இன்னும் காதலை அதிகப்படுத்தியது.

திடீரென ஒரு நாள் கவிதாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். கவிதாவை தவிர மற்ற அனைவருக்கும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது.

எவ்வளவோ எடுத்துக்கூறியும்.., அவளது வீட்டார் திருமணத்தை நிறுத்தவில்லை. வேறு வழியின்றி திலீபனின் காதலை கைவிடும் சூழ்நிலைக்கு கவிதா தள்ளப்பட்டார்.

திலீப்பிற்கு கடிதம் எழுதினாள்… அதில் என்னை மறந்துவிடு… உன் நல்ல குணத்திற்கு என்னை விட மிக நல்ல பெண் கிடைப்பாள்… உனது வாழ்க்கையின் குறிக்கோளை நோக்கிச் செல் என்று எழுதியிருந்தார்.

மாப்பிள்ளை பார்த்த இரண்டு தினத்தில் நிச்சயதார்த்தம், மூன்று மாதத்தில் திருமணம் என்று நாட்கள் ஓடியது. ஆரம்பத்தில் எப்பொழுதும் சோகமாகவும், அழுகையுடனும் இருந்த கவிதா கவலையை மறந்து அவளது முகத்தில் கல்யாண கலை வந்தது .

ஆனால்., அவளது காதலனை மட்டும் கவிதாவால் மறக்க முடியவில்லை. மனதிற்கு பிடிக்காமல்.., வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தார்.

இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் இவளது காதலனிடம் இருந்து ஒரு பரிசு வந்தது. அது என்னவென்று திறந்து பார்க்க மனமின்றி அவனது பெயரை மட்டும் அனைத்துக் கொண்டு முத்தமிட்ட அவள், திலீப் மிகவும் நல்லவன் தவறாக எதுவும் அனுப்பியிருக்க மாட்டான் என்று அதனை பிரிக்காமலே வைத்துவிட்டார்.

பெற்றோருக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு, வீட்டில் அனைவரையும் எதிர்த்து அக்குழந்தைக்கு தனது காதலனின் பெயரை வைத்தாள்.

அவளால் தனது கணவனை மட்டும் காதலிக்க முடியவில்லை. நாட்கள் கடந்தது இருவரும் விவாகரத்து செய்ய முன்வந்தனர். ஆனால் குடும்பத்தினர் குழந்தையின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

சரி என்று பல வருடங்கள் கழிந்தது. மகன் திருமண வயதை எட்டினான். காதலித்த பெண்ணையே மகனுக்கு திருமணம் வைக்க தயாரானது கவிதாவின் குடும்பம்.

திருமண வரவேற்பு பலகையில் திலீப் என்ற பெயரை கண்டதும் திலீப்பிற்கே திருமணம் நடக்க போவது மாதிரி கற்பனை செய்து கொண்டாள்..

மணமேடை விருந்தினர்கள் அனைவரையும் காணும் போது தனது திருமண நியாபகம் வந்தது…

திருமண மண்டபத்தில் கணவன் ஒருபுறம் இத்தனை ஆண்டுகள் தனது மனைவிக்கு தன் மேல் காதல் வரவில்லையே என்றும்…, அவரது உறவினர்கள் இன்னும் இவர்கள் இருவரும் ஒன்று சேரவில்லையே என்ற கவலையிலும் இருந்தனர்.

ஒருபுறம் தனது காதலனுடன் சேர முடியவில்லை என்ற கவலையில் இருந்த கவிதா தனது வீட்டிற்கு ஓடினாள். மனைவியை பின் தொடர்ந்து கவிதாவின் கணவனும் வந்தான். காதலன் அன்று கொடுத்த பரிசை கவிதா எடுத்தாள். பிரித்துப் பார்ப்பதற்கு முன்பு ஆயிரம் முத்தத்தை கொடுத்தாள்.

காதலன் கொடுத்த பரிசை திறந்து பார்க்க சென்ற போது, அவளை ஏதோ ஒன்று தடுத்தது… உடனே வேகமாக சென்று காதலிக்கும் போது திலீப் தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கி கொடுத்த புடவையை அணிந்து கொண்டாள்..

திலீப்பிற்கு பிடித்த அந்த ஜிமிக்கி கம்மல், கலகலவென சினுங்கும் கண்ணாடி வளையல் எல்லாம் அணிந்து கொண்டாள்…! பின்பு அந்த பரிசை திறந்து பார்த்தார் மாலதி. அதில்.., கவிதாவுக்கும், அவரது வருங்கால கணவருக்கு என இரண்டு மோதிரமும், ஒரு கடிதமும் இருந்தது.

அதனை படித்த கவிதா கீழே சாய்ந்தாள். மனைவியை தேடி வந்த கணவர் கவிதா கீழே சாய்ந்து கிடப்பதை பார்த்து அவளை தூக்கினான்… ஆனால் கவிதா ஏற்கெனவே இறந்து விட்டாள்…

ஆம்.., அப்பொழுது தான் கவிதாவின் கணவர் திலீப் எழுதிய கடிதத்தை பிரித்துப் பார்த்தான்… அதில்.., நீ நன்றாக இரு என்றும் இன்னொருவருக்கு மனைவியாகப் போகும் உனது உயிர் என்னிடத்தில் இருப்பது சரியல்ல.

அதனால்.., உயிரை உன்னிடத்தில் கொடுத்துவிட நான் இறந்து போகிறேன் என்று இரத்தத்தில் எழுதியிருந்தான் திலீப்…. இதனை படித்த கவிதாவின் கணவர் கண்ணீர் விட்டார்..

உண்மையான காதலை மரணத்தினால் கூட பிரிக்க முடியாது…..