ஜெயலலிதா மரண விசாரணை… தீபாவுக்கு சம்மன்..

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் தீபாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள், சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

large_jdeepa-2-9726தற்போது இந்த விசாரணை கமிஷன் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 6 பேருக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடக்கம் முதலே கூறிவரும் தீபா ஜெயலலிதாவை தனது சகோதரர் தீபக் தான் சசிகலாவின் குடும்பத்துடன் சேர்ந்த கொன்றுவிட்டதாக ஊடங்களில் பகிரங்கமாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.