பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்!

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று (22) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் சந்திப்பொன்றின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தமது இந்த நிலைப்பாடு பற்றி ஸ்ரீல.சு.க.வுக்கு கலந்தாலோசனை செய்ய சி.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ளது.

h_4_ill_1195085_73d5_830363