தனியார் மருத்துவமனையில் சசிகலா கணவர் திடீர் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலா கணவர் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sa-29-640x381

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் சசிகலா கணவர் நடராஜன். இந்நிலையில் இன்று, சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சி.பி.ஐ., கோர்ட் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வந்த சில மணி நேரத்திலே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலா கணவர் நடராஜன் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.