கீதாவின் இடத்திற்கு பியசேன!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட உறுப்பினர் பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுள்ளார்.

கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட உறுப்பினர், பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக இன்று காலை சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றார்.

கீதா குமாரசிங்கவுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம்வகிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே அவருக்கு பதிலாக பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Capturegchnvg