இலங்கையின் கிரிக்கெட் இவ்வாறான நிலையில் இருந்தால் 2019 உலகக் கிண்ணத் தொடரில் நாம் வெற்றிபெறுவது கடினம் என்று முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்வு கூறமுடியாது. இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் இலங்கை அணி வெற்றிபெறுவதும் கடினமாக இருக்கும்.
விளையாட்டு வீரர்களை குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை அவர்களிடம் நல்ல திறமையுள்ளது. ஆனால் கிரிக்கெட்டை நிர்வகிக்க முடியாத நிர்வாகமே இன்று காணப்படுகின்றது.
நான் கிரிக்கெட் பற்றி கூறியவை சரியாக நடந்துள்ளன. அதனால்தான் எமது நாட்டு அணி இப்படியே இருந்தால் உலகக் கிண்ணத் தொடரில் எதை சாதிப்போம் என்று சொல்லமுடியாது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றது தொடர்பாக மகிழ்ச்சியடைகிறேன்.
வீரர்களிடம் எந்தப்பிரச்சினையும் இல்லை. வீரர்களின் மனநிலையை சரிசெய்து நாட்டுக்காக விளையாடவைத்தால் வெற்றி பெறுவது உறுதி என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.