எனது கிரிக்கெட் வாழ்நாளில் கிடைக்காதது பாகிஸ்தானில் கிடைத்தது- மனம் திறக்கிறார் பெரேரா!!

தனது 9 வருட கிரிக்கட் வாழ்வில் தனக்கும் தனது அணிக்கும் இதுவரை கிடைக்காத பாதுகாப்பொன்று பாகிஸ்தானில் வழங்கப்பட்டதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசேர பெரேரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் தயக்கம் காட்டியதால், அபுதாபியில் நடைபெற்ற இரண்டு ரி-ருவென்ரி போட்டிகள் மற்றும் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டிக்கு அனைத்திற்கும் சகலதுறை வீரரான திசேர பெரேரா அணிதலைவராக நியமிக்கப்பட்டார்.

கடும் அச்சத்தின் மத்தியில் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு, உற்சாக வரவேற்பும் வழங்கப்பட்டது.

ஆனால், இலங்கை அணியை இத்தொடரில் பாகிஸ்தான் அணி வெள்ளையடிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.