யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில்  இன்று காலை முதல் பல்கலைக்கழக நுழைவாசலுக்கு முன்னால் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்வரும் வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

59e58fc1ab515-IBCTAMILஇவ்வாறான நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்