ஜப்பானிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்த சந்திப்பில், கலந்து கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான தொடர் அடக்குமுறைகள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இதுகுறித்து அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தங்காலை சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச தனது மூத்த மகனான நாமல் ராஜபக்சவைப் பார்த்துள்ளார். நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போது மஹிந்த கண்ணீருடன் காணப்பட்டுள்ளார். இதன்பின்னரே அவர் கடும் கோபத்தில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.