திருமணமான மூன்றே நாளில் பிரபல நடிகையின் செயல்!

காதல் திருமணம் தான் இப்போது அதிக நடிகர் நடிகைகள் செய்து அந்த வரிசையில் இணைந்தவர் நடிகை பிரியாமணி, தனது காதலர் முஸ்தபாராஜை கடந்த மாதம் மணந்தார். திருமணத்துக்கு பிறகு மவுனம் காத்து வந்தவர் சமீபத்தில் தனது திருமண வாழ்க்கைபற்றி குறிப்பிட்டார்.

201708240946302484_1_priyamani._L_styvpf

பிரியாமணி கூறுகையில், முஸ்தபாவை செலப்ரட்டி கிரிக்கெட் லீகில் சந்தித்தேன். முதல்பார்வையிலேயே அவருடன் எனக்கு காதல் வந்துவிடவில்லை. நண்பர்களாகத்தான் பழகினோம். என் மீது அவர் காட்டிய அக்கறையே அவர் மீது எனக்கு காதலை வரவழைத்தது. திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக நடிப்பை நிறுத்திக்கொள்ள நான் எண்ணவில்லை. திருமணம் முடிந்த மூன்றாவது நாளே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன்.”

அதற்கு என் கணவர் முழு சம்மதம் தெரிவித்திருக்கிறார். மனைவியை எப்போதும் சமையல் அறைக்குள் அடைத்து வைக்கும் எண்ணம் கொண்டவர் அல்ல என் கணவர் என்கிறார் நடிகை ப்ரியாமணி. ஆனால், புகுந்த வீட்டில் உள்ளவர்கள் ப்ரியாமணியின் இந்த முடிவவை கண்டு அதிர்ச்சியானார்களாம். இதனால், புதிய படங்களை ஒப்புகொள்ள வேண்டாம் என்று ஆர்டர் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.