பெற்ற பிள்ளையை குழி தோண்டிப் புதைத்த தாய்! – முல்லைத்தீவில்

ஆண் சிசு­வின் உடல் முல்­லைத்­தீவு, கேப்­பா­பி­லவு மாதி­ரிக் கிரா­மத்­தில் நேற்று முன்தினம் மீட்­கப்­பட்­டது.

11626-1-151b354c5cf8b5dff2ce35a752ff6467

இதை­ய­டுத்து இந்­தக் கொலை­யு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் இரு பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வலை அடுத்தே சிசு­வின் உடல் மீட்­கப்­பட்­டது. சூரி­பு­ரம் மாதி­ரிக் கிரா­மத்­தில் சம்­ப­வம் நடந்­தது.

சிசு ஒன்­றின் உடலை இரு­வர் புதைப்­பதை அவ­தா­னித்த ஒரு­வர் பொலி­ஸா­ருக்­குத்தக­வல் வழங்­கி­யதை அடுத்தே பொலி­ஸார் அங்கு விரைந்­த­னர்.

சிசு­வைப் பெற்­றெ­டுத்­தார் என்ற சந்­தே­கத்­தில் 35 வய­து­டைய பெண் ஒரு­வ­ரும்,அவ­ருக்கு ஒத்­தாசை புரிந்­தார் என்ற சந்­தே­கத்­தில் பெண்­ணின் தாயும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.